தலைவலி 2 நிமிடத்தில் குணமாக அருமையான டிப்ஸ்...!!!
கால்வலி முதுகுவலியைக் கூட தாங்கி வேலை செய்து விடலாம். ஆனால் தலை வலி வந்தால் பாடாய் படுத்திவிடும். நகர முடியாது. வேலைகளை செய்ய முடியாது. தலைவலி சரியானவுடன், அப்பாடா என்கின்ற பெருமூச்சு மகிழ்ச்சியுடன் வரும். இதை அனுபவிப்பவர்களுக்கு புரியும்.
அப்படி தலைவலி வந்தால், சரியானால் போதும் என்று பக்க விளைவுகளை அறிந்தும் பெரும்பாலோனோர் மாத்திரைகளை விழுங்குவார்கள். முதலில் அதற்கான இயற்கை முறையில் தீர்வுகளை பாருங்கள். எதையும் முயலாமல் மாத்திரையை விழுங்குவது தவறு. இதோ உங்களுக்கான எளிய வழிகள்
இஞ்சி
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இஞ்சியை நசுக்கி அதில் போடுங்கள். 10 நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, அதனை வெதுவெதுப்பாக பருகவும். வலி சட்டென விட்டுவிடும்.
முட்டைக் கோஸ்
முட்டைக் கோஸ் இலையை நீர் விடாமல் அரைத்து அதனை தலையில் பற்று இடவும். அதன் சற்றினை நெற்றியில் தடவவும்.
சுக்கு
சுக்கு ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு அரைத்து தலையில் பற்று இடுங்கள். தலைவலி குணமாகிவிடும்.
உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்கை துண்டாக்கி, நெற்றியில் தேய்க்கவும் அல்லது அதனை அரைத்து தலையில் பற்று போல் இடுங்கள். சில நிமிடங்களில் தலை வலி மறைந்து போகும்.கிராம்பு
சூடு செய்த கிராம்பை கைக்குட்டையில் மடித்து, அதை மூச்சினால் உள்ளிழுத்தால், ஒரு நிமிடத்தில் தலைவலி குறைந்துவிடும்.
இத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
நன்றி....🙏🙏🙏
Comments
Post a Comment