முகப்பருக்களை நீக்க என்ன செய்யலாம் ?

முகப்பருக்களை நீக்க என்ன செய்யலாம் ? 





முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதுமா. அதற்கு உரிய பராமரிப்பு இருந்தால் தான் மாசு மருவற்ற சருமத்தைப் பெற முடியும். குறிப்பாக முகப்பருக்களை...


முகத்தின் அழகை சீர்குலைக்கும் முகப்பருக்கள் பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் பாடாய்ப்படுத் துகிறது என்றே சொல்லலாம். முகப்பருக்களைக் கட்டுப்படுத்துவதிலும் மேலும் அதிகரிக்காமல் தடுப்பதிலும் அதிக நேரங்களைச் செலவிடுபவர்கள் நம்மில் பலர் உண்டு.


அழகான முகத்தில் முதன் முதலில் முகப்பருக்களைப் பார்த்ததுமே சிலர் அதைக் கிள்ளி எறிய முயற்சி செய் வார்கள். இதனால் பருக்கள் அதிகமாகுமே தவிர குறையாது. மேலும் சமயங்களில் அவை கருப்பு நிற தழும் பாக மாறி முகத்தின் நிறத்தையும் பொலிவையும் கெடுத்துவிட வாய்ப்புண்டு.

அழகு குறித்த எந்த சிகிச்சையும் தொடங்குவதற்கு முன்பு அது எதனால் வருகிறது என்கிற காரணத்தை முத லில் கண்டறிந்து அதன் பிறகு அதற்கேற்ப தீர்வு காண்பது பலனையும் அதிகமாக கொடுக்கும். அந்த வகை யில் முகப்பருக்கள் வருவதற்கான காரணத்தை அறிந்து அதை எளிதில் போக்குவதற்கான வழிமுறைகளை யும் காணலாம்.


முகப்பருக்களுக்கு காரணம்


எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கும். இவை தவிர வெளியில் செல்லும் போது முகத்தில் படியும் தூசுகள் சரும துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்கிவிடும்.


பருக்களைக் கிள்ளி அல்லது கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புண்டு என் பதால் இயன்ற அளவில் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி.

பொடுகுத்தொல்லை, மலச்சிக்கல், அடுத்தவர் உபயோகித்த சோப், டவல், படுக்கையை பகிர்தல், சுகாதார மில்லாத நீர், அதிக கெமிக்கல் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம், செரிமான கோளாறு, முகத்தில் படியும் அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் அதிகம் நிறைந்த உணவுகள், போதிய நீர் குடிக்காதது, இளம்பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை இதற்கு காரணமான சொல்லலாம்

இவற்றில் ஒன்று உங்களிடம் இருந்தாலும் கண்டிப்பாக முகப்பருக்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக் கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது முகப்பருவை விரட்டுவது எப்படி என்பதைப் பார்க்கலா மா?


தக்காளி




தக்காளி தங்கம் போல் சருமத்தை வைத்திருக்கும் என்று சொல்லலாம். பழுத்த தக்காளியைக் கூழ்போல் மசித்து கொள்ளவும். சுத்தமான நீரில் முகத்தைக் கழுவவும். மசித்த தக்காளி கூழை எடுத்து முகத்தில் கீழி ருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகப்பருக்கள் மறையும். மேலும் முகப் பருக்கள் வருவதைத் தடை செய்யும்.


பூண்டு,வெங்காயம்






பூண்டு, வெங்காயச்சாறு இரண்டுமே முகப்பருவை உண்டாக்கும் அழுக்குகளை நீக்கும் வல்லமை கொண்டது. பூண்டை நசுக்கி சாறு பிழிந்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு தேய்த்து வந்தால் முகப்பரு பெரிதாகாமல் மறையும். இதே போன்று சின்ன வெங்காய சாறையும் தடவி வரலாம்.


வாழைப்பழத்தின் தோல்





வாழைப்பழத்தின் தோலுடன் பசுவின் பாலேடு அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வரவும். தொடர்ந்து செய்யும் போது பருக்கள் வேரோடு உதிர்ந்துவிடும். கருமை நிறமும் தங் காது.


இத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க...

                                    நன்றி...🙏🙏🙏








Comments